Sunday, 6 December 2015

விழிக்கொடை, உடற்கொடை

தோழர் கா.சு.நாகராசனின் தந்தையார்

நா.சுப்பிரமணியன் மறைவு.

விழிக்கொடை, உடற்கொடை செய்யப்பட்டது.

***************************************************



  பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டபுதூரை சேர்ந்த தோழர்.காசு.நாகராசன் அவர்களின் தந்தை நா.சுப்பிரமணியன் (வயது 75) அவர்கள் கடந்த 04.12.2015 அன்று காலை முடிவெய்தினார். அவர் உடல் அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனையில் கண்தானம் செய்பட்டது. மதியம் 3 மணி அளவில் அவரது இல்லத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், சா.கதிரவன், இல.அங்ககுமார், மா.திருமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்கள் நேருதாசு, நிர்மல், திமுக, விடுதலை சிறுத்தைகள், அம்பேத்கர் இயக்க பொறுப்பாளர்கள் இரங்கலுரையாற்றினார்கள்.


சீர், சடங்குகளும் இன்றி விழிக்கொடை, உடற்கொடைக்கு ஒத்துழைத்த உறவினர்களுக்கு தோழர்.காசு.நாகராசன் கண்ணீருக்கிடையிலும் நன்றி கூறி பேசினார்.

உறவினர்கள், ஊர் பொது மக்கள் முன்னிலையில் வழக்கமாக நடைபெறும் எந்தவித சீர், சடங்குகளும் இன்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மாலை 6 மணிக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக உடல் ஒப்படைக்கப்பட்டது.
.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றார்கள்.



No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...