Monday 17 September 2018

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில்

அறிவுலக ஆசான்தந்தை பெரியாரின்

140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !


   பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியாரின் 140ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2018 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக்‍ கொண்டார்கள். பின்னர் மாணவர், மாணவியர்களுக்கு, பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.


   விழாவில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அசரப் அலி, சங்கமம் அமைப்பின் செயற்பாட்டாளர் எஸ்.அன்பரசு ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    முன்னதாக விழாவிற்கு குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன் தலைமை வகித்தார். தோழர்கள் இரா.ஈசுவரன், அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தாகள்.
   தோழர்கள் ச.மாதவன், து.ஆறுமுகம், ப.பாலன், வே.சக்தி மற்றும் பலர் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.






Tuesday 14 August 2018

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில்

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் நினைவுரை

தமிழ்நாடு இன்று முதன்மையான மாநிலமாக உள்ளது. தமிழகத்தை இந்தியாவோடு கூட ஒப்பிடக்கூடாது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை அய்ரோப்பிய நாடுகளோடு தான் ஒப்பிட வேண்டும் என சொல்லி, நோபல் பரிசு வென்ற அமிர்திய சென் அவர்கள் கூறியுள்ளார். அந்த அளவிற்கு முதன்மை மாநிலமாக தமிழகம் இன்று உண்டென சொன்னால், அதற்கு பெருமை மிகு  காரணம் கலைஞர் என்றால் அது மிகை ஆகாது. காரணம், 1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றினாரோ, அதை பின்னாட்களில் நிறைவேற்றியவர் தான் கலைஞர். 1929 மாநாட்டில் பெண்களுக்கு  இடஒதுக்கீடு கேட்டார். அதன்படியே பெண்களுக்கு உள்ளாட்சி துறையிலே, வேலைவாய்ப்பிலே, ஆசிரியர் பணியிடங்கள் என அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கினார்.

அதே போல கலைஞர் எந்த இடத்திலும் பெரியாரை விட்டுக்கொடுத்தவர் அல்ல. 1973  ஆண்டு ஈரோட்டில்  பெரியார் மற்றும் குன்றக்குடிகள் அவர்கள் தலைமையில் அய்யாவின் சிலையை திறந்து வைக்கிறார், அப்போது ஒரு முழக்கத்தை வைக்கிறார் "பாராட்டி போற்றி வந்த பழமை வாதமெல்லாம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்" என்றார். அந்த அளவிற்கு அய்யா மீது பற்று கொண்டவர் அய்யா கலைஞர் அவர்கள்.

தோழர்களே.. அய்யா அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள், திட்டங்கள் ஆகியவற்றை சட்டங்களாக கொண்டு வந்தது மட்டுமல்ல. எல்லாருக்கும் தெரிந்த செய்தி தான். அய்யா அவர்கள் இறந்தபோது அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என கலைஞர் சொன்னபோது, அதிகாரிகள் எதை அரசு பதவியிலும் இல்லாதவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்க சட்டத்தில் இடமில்லை என சொன்னபோது, அடுத்த நொடி "காந்தி எந்த பதவியில் இருந்தார் என்பதற்காக அரசு மரியாதை கொடுக்கப்பட்டது?" என்னக்கேட்டு அதிகாரிகளை வாயடைக்க செய்து அய்யாவிற்கு அரசு மரியாதை அளித்தார்.

அதே போல, இங்கே பொங்கலூர் பழனிசாமி அவர்கள் இருக்கிறார். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார். "கலைஞர் அவர்கள் கோவை வரும் போதெல்லாம் உன்னை கேட்பார் அப்பா" என்பார். அந்த அளவிற்கு, அவர்  எங்கு இருந்தாலும் செயல்படுகின்ற தோழனை கவனிக்கின்ற ஆற்றல் அவரிடத்தில் இருந்தது. அதன் விளைவாக தான் சேலம் கோட்டம் நமக்கு கிடைத்தது. அதற்காக இங்குள்ள அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் போராடினோம். கடைசியாக கேரளா அரசாங்கம் ஈரோடு, கோவை ஆகியவற்றையாவது  பாலக்காட்டோடு   சேர்க்க வேண்டும் என்றது. அதையும் கடுமையாக எதிர்த்தோம். 2007 ஓணம் அன்றைக்கு இங்கே நாமும், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களும் ரயில் மறியலில் ஈடுபட்டோம். உடனே அன்று முதல்வராக இருந்த அச்சுதானந்தம் கலைஞரையும், அன்றைய ரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத்தையும்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாம் இங்கே மாணவர்களோடு இணைத்து போராடிக்கொண்டு இருந்தோம். அப்போது வீரபாண்டியார் அழைத்தார் "தலைவர் உங்க கூட பேச சொன்னாரு, அங்க பேச்சுவார்த்தைல கடைசியா கிணத்துக்கிடவையாவது பாலக்காடோடு சேர்க்க வேண்டும் என கேட்கிறார்களாம், கலைஞர் தான் அங்க போராடீட்டு இருக்கற ராமகிருஷ்ணனை கேளு என்றார்" எனக் கூறினார். கலைஞர் முடிவ எடுத்தா சரியாகத் தான் இருக்கும் என ஒத்துக்கொண்டோம்..

அதே போல பெருமதிப்பிற்குரிய தோழர்களே, 
இங்கே இருக்கிற பெரியார் சிலை அமைக்கப்பட்டதும் ஒரு வரலாறு. கலைஞர் என்ற எவ்வளவு நினைவாற்றல், எவ்வளவு சுறுசுறுப்பு என்பதை நேரில் கண்டோம். பெரியார் சிலை வைக்க கடிதம் கொடுத்து வைக்க  வேண்டும் என்பதற்காக, கலைஞருடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் பேராசிரியர் நாகநாதன் அவர்களிடம் கொடுத்தோம். அவரும் கொண்டு போய் கலைஞரிடம் 8  மணிக்கு கொடுத்துள்ளார். சரி நானும் ஒரு இரண்டு நாள் ஆகிவிடும் என நினைத்து, நானும் பொங்கலூராரும் அறிவாலயத்திலே, கலைஞர் வரும் வழியில் நின்றிருந்தோம். கலைஞர் சரியாக காரில் வந்தவர், எங்களை பார்த்தவுடனே "என்ன பெரியார் சிலைக்கா"என்றார். நாங்களும் ஆமாம் என்றோம். "சரி போய் முதன்மை செயலாளர் ராஜ மாணிக்கத்தை பாருங்க" என்றார். நாங்களும் அவரை மறுநாள் போய் பார்த்தோம். பார்த்தால் அவர் சத்தம் போடுகின்றார் "எங்க போனீங்க நேத்து எல்லாம்? 8 மணிக்கு கொடுத்த கடிதத்திற்கு 9 மணிக்கு கையெழுத்து போட்டு ஆர்டர் கொடுத்துட்டாரு" என்றார். ஒரு நாள் முழுக்க எங்களை தேடி உள்ளனர். இங்க வந்து பார்த்தால் அபுல்ஹாசன் கலெக்டர் அவர்களும் எங்களை சத்தம் போடுகின்றார் "நேற்றிலிருந்து உங்களை தேடுகின்றோம், எங்கே போனீங்க..?" என்கிறார். இப்படி ஒரு மணி நேரத்தில் உத்தரவு  போட்டு அமைக்கப்பட்டது தான் இந்த பெரியார் சிலை.

அதே போல பெரியார் என்றால் கலைஞருக்கு எவ்வளவு ஈடுபாடு என சொல்வதற்கு சிறந்த உதாரணம் என்னவென்று சொன்னால் 2009 நாங்கள் ஈழத்திற்காக போராடிக்கொண்டு இருக்கையில், இன்று பார்ப்பன கிரிஜா வைத்தியநாதன் போல, அன்று ஒரு பார்ப்பன தலைமைச் செயலர் இருந்தார். அவர் நம்மீதுள்ள ஈழப் விடுதலைக்காக நம் மீது முன்னரும், இப்போதும் உள்ள வழக்குகள், போராட்டங்கள் ஆகியவற்றை புகைப்பட ஆதாரமாக ஒரு பைலில் வைத்து, கலைஞர் முன் வைத்து "பெரியார் திராவிடர்  கழகத்தை" தடை செய்ய வேண்டும் எனக்கூறுகிறார். அதை புரட்டிப்பார்த்த  கலைஞர் "பெரியார் இயக்கத்தை என் கையால் நான் தடை செய்வதா..? முடியவே முடியாது" எனக்கூறி அந்த பைலை தூக்கி எறிந்தார்.

அப்படிப்பட்ட தலைவர். ஒரு வரலாறே முடிந்து விட்டது. ஒரு அத்தியாயமே முடிந்து விட்டது. இனி நாம் புதிய அத்தியாயத்தை தான் துவங்க உள்ளோம். இங்கே படங்களை பார்க்கின்றோம். பெரியாரும்,அண்ணாவும், கலைஞரும் நடந்து போவது போல உள்ள படம். அவர்கள் நம்மை விட்டுச்சென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகள் இருக்கின்றது, நான் பணிவோடு கேட்டு கொள்கிறேன். அந்த கொள்கைகளை நாம் பின்பற்றும் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது எனக்கூறிக்கொண்டு வீர வணக்கத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

10.08.2018 கோவையில் கலைஞர் அவர்களுக்கு நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியின் முடிவில் 

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் பேசியது

பெரியார் குறித்த அவதூறுகளுக்கான பதில்

தோழர் மணியரசன் அவர்களின் பெரியார் குறித்த அவதூறுகளுக்கான பதில்!

16-02-2015ம் நாள் சென்னை, சங்கம் நிகழ்வில் நடைபெற்ற ‘திராவிடமா? தமிழ்த் தேசியமா?’ என்ற விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார்; வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப் பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து திராவிடத்தின் மீதும், பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறு ‘ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்திதாசர் கைவிட்டார்’ என்பதாகும்.
முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக - மிகவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில்-1910ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன்படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராகத்தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பொழுது ‘தாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது ‘சாதியற்ற தமிழர்கள்’ என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார். ஆனால் அவரே 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார்.
“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தர்களுமேயாகும். சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்கள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)
தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்குப் பிறகு தான் ‘திராவிட’ என்ற அடையாளத்தை அயோத்திதாசர் ஏற்றுக் கொள்கிறார். 1881க்குப் பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்கக்கூடிய பள்ளியை நடத்தி வந்தார். அவருடன் இணைந்து 1886ல் திராவிட பாண்டியன் என்ற இதழை இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்”, “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார். ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிடக் கோருகிறார்.
1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்” என்பதில் இருந்து 1910ல் “சாதியற்ற திராவிடர்கள்”என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.
தோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்றுப் பார்வையாக இருக்க முடியாது. இந்தப் பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும். இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார். 1912ம் ஆண்டு திரு.நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது. இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜன சபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியல் முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அரசாங்கத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகாரப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெறுகிறது.
இவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம். “சாதியற்ற தமிழர்” என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்” என்று மாற்றிக் கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால், இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள். பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை; ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள் வரையிலான வரலாறுகளைப் படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாகத் திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள். 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்குச் செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி, பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தை தொழிற்சங்கவாதியும், நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரிசாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார்.
இதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தார் என்பதுதான். இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும், தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும், மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும், ஆதி திராவிடர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது.
இன்று தோழர் மணியரசன் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி, திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிதுபடுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும், வடுகர்கள் என்ற இனத்தையும், தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியம், தமிழின விடுதலை என்று பேசும் பொழுது, அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாகப் புரிந்துகொண்டு, யாருக்கும் கெடுதி நினைக்காத, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும் என்பதை உணர முடியும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக, எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம். இல்லாத பெருமை பேசும் தமிழ்த் தேசியம், தமிழகத்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.
தோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றைத் திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைந்து பார்த்தோம். இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது, அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார். மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். இது கடைந்தெத்த பொய், வரலாற்றை மறைக்கும் செயல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே. கிபி 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலகட்டங்களில்தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டன. இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும். இதைத் திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டார் என்றால், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால், ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே. ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு. இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.
அதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரைக் காட்டுகிறார். மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்தியப் பார்ப்பனரையும், தென்னிந்திய பார்ப்பனரையும் பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லாம் சரி. ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை, வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. ராகுல் திராவிட்டிடமும், மணி திராவிட்டிடமும் ஏன் இந்த பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வார்கள். இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதைக் கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன். அவருக்கு நன்றாகவே தெரியும் - தமிழ் என்பது மொழியையும், தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டைச் சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டுச் சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கிப் பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும், திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.
 “வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}
இதில் தமிழைக் குறிக்கத்தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம், அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு, பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடா விடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால்டுவெல் 1850களில் தான் வருகிறார். அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
- சித்தர்கணம்
இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையே. இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்த் தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்பதும், ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை என்பதும் உண்மை.
மேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள். இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம் தனித்தே இயங்கி வந்தன. இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது. இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழ்ந்த மக்கள் தொகை 4,93,410 பேர். இது 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும். இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள், எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகாணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது. ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர் மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே. இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.
“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.
ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925
மேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில்
“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925
என்று குறிப்பிடுகிறார். அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களைக் குறிப்பிட்டு இது தமிழுலகம் என்றே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை.
“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்துப் போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர்! எங்களுக்கு வயதாகிவிட்டது! நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்காள்! தமிழர்காள்! வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.”
என்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்
“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”
இதில் தெளிவாகவே மலையாளிகளைப் பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார். அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில் 29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும், அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தினைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள். அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்த் தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.
இப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை. தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது. அதை மாற்றவே தனித் தமிழ் இயக்கம் காணப்பட்டது. மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிடர் இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊனமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிக்கட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.
“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல, மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...
...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனர் அல்லாதார் என்பதா? பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்!...
திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21
இதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றைய காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றைய தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது. இதை உடைத்து தமிழ்ப் பண்பாட்டையும், தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரவாள மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.
கடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார். பெரியார் மொழி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.
‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.'
தெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை
1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.
(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)
ஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாகத் தெரியும். தன் பொது வாழ்வில் அவர் என்றும் தமிழ் மக்களுடனின் மேன்மையைக் குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருப்பது போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல, இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்ந்தாலே புரியும். ஆங்கிலத்தைப் படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் திரித்தல்வாதம்.
அப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக்கேணி கடற்கரையில் நாவலர் சோமசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை ஏன் வைக்க வேண்டும்? அதற்கு முன்பாக அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தித் திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைக்காக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தித் திணிப்பை தடுத்தவர் தான் பெரியார். 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியைப் பார்த்து கண்டிப்பாக மனம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழைப் பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார். அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை. அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தித் திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பு பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதாமல் இருந்திருக்கலாம்.
11-09-1938 அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும், தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் இதில் எதையேனும் செய்திருக்கிறார்களா?
“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!
தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!”
குடி அரசு - தலையங்கம் - 23.10.1938
இங்கே தமிழ்த் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரைக் கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை. ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ்ச் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார். மக்களுடன் மக்களாக வாழ்ந்தார். அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர். ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பல மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரைத் தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.
பெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை; அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன். பாவம் என்ன செய்வது தனது கருத்தான ‘பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார்’ என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியத்தை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான். காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார்; செயல்பட்டார். அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.

எழுத்தாளர்: ஹரி ஹரன் பிரிவு:கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2015

Saturday 11 August 2018

திராவிடக் கட்சிகள் செய்யவேண்டிய பணி!


திராவிட இயக்க நூல்களுக்கு எப்போது உருவாகும் ஓர் இணையக் களஞ்சியம்?

11.08.2018 தமிழ் இந்து தலையங்கம்.






திராவிட இயக்கத்தின் முதன்மையான தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் இழப்பு அவ்வியக்கத்துக்கு மட்டுமின்றி, தமிழ் எழுத்துலகுக்கும் மாபெரும் இழப்பு. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு என்று சங்க இலக்கியங்களைக் கதைகளாக, கவிதைகளாக, கடிதங்களாக தமிழகத்தின் பெருவாரியான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் கருணாநிதிக்கும் பெரும்பங்குண்டு. எழுதப் படிக்கத் தெரியாதவர்களும்கூட அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் வாயிலாகப் பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையறிந்துகொண்டார்கள். கருணாநிதியின் எண்பதாண்டு கால எழுத்தும் பேச்சும் கணிசமான பகுதி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது ஆறுதலானது. ஆனால், அவை அருங்காட்சியக ஆவணங்களாக சுருங்கிவிடக் கூடாது.

பெரியாரின் எழுத்துகளும் உரைகளும் அவ்வப்போது தொகுப்புகளாக்கப்பட்டு வருகின்றபோதிலும் முழுத் தொகுப்பாக இன்னும் கிடைக்கவில்லை. அண்ணா ஒரு பெரும் எழுத்தாளர். ஆனால், அவர் எழுதிய, பேசிய அத்தனையும் இன்றும் நமக்கு நூல் வடிவில் படிக்கக் கிடைக்கவில்லை. கணிசமான தொகுப்புகள் வந்திருக்கின்றன என்றாலும், அதை தரப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் என்று சொல்ல முடியாது. தஞ்சை செம்பியனின் தனிமுயற்சியால் தற்போது இணைய அளவில் மட்டும் பெரும் தொகுப்பு படிக்கக் கிடைக்கிறது. கருணாநிதியின் எழுத்தும் உரையும் அவ்வாறு, அச்சுநூல், மின்னூல்களாகவும், இணையப் பதிப்புகள், காணொலிகளாகவும் என்ற எல்லா வகையிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

காந்தியின் சிந்தனைகளும் அம்பேத்கரின் சிந்தனைகளும் முழுத் தொகுப்பாக அச்சிலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அது சார்ந்த விவாதங்களுக்குத் துணைநிற்கும் அறிவுக் கருவூலங்களாக அவை விளங்குகின்றன. ஆனால், பெரியாரின் ‘குடிஅரசு’ கட்டுரைகள் மட்டுமே தற்போது மின்னூல்களாகக் கிடைக்கின்றன. சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் தமிழ் மண்ணுக்கென ஒரு தனித்த சுயமான பார்வையை முன்னெடுத்த மற்ற திராவிட இயக்கச் சிந்தனையாளர்களைப் பற்றிப் படித்து அறிந்துகொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நூலகமோ இணையதளமோ இன்னும் உருவாகவில்லை.



திராவிட இயக்கம் என்பது பெரியாருக்கும் முற்பட்டது. கருணாநிதிக்குப் பிறகும் தொடர்ச்சி உண்டு. நூற்றுக்கணக்கான அறிவுஜீவிகள் பங்களிப்பு செய்த இயக்கம் அது. டி.எம்.நாயர் தொடங்கி சிங்காரவேலர், குத்தூசி குருசாமி, சாமி.சிதம்பரனார், குருவிக்கரம்பை வேலு, இரா.செழியன், முரசொலி மாறன், க.திருநாவுக்கரசு என்று நீளும் பெரும்பட்டியல் அது. அதேபோல இலக்கியத்திலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் நீள்கின்றன. இங்கர்சால், பெட்ரண்ட் ரஸல் என்று மேலைநாட்டு சிந்தனையுலகத்தையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்கள் திராவிட இயக்கத்தினர். தலைவர்கள் தங்களுக்கென்று தனி இதழ்களை நடத்திய வரலாறும் உண்டு. திராவிட இயக்கத்தின் எழுத்துப் பதிவுகள் நவீன தமிழ்நாட்டினுடைய அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையெல்லாம் காலத்தில் கரைந்துபோய்விடாதிருக்க அனைத்தையும் ஆவணப்படுத்தியாக வேண்டும். அதைப் பொதுவெளியில் அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில் இணையத்திலும் கிடைக்கச்செய்ய வேண்டும். ஆட்சிப்பொறுப்புக்கு எதிர்நின்று மோதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்துமுடிக்க வேண்டிய காலத்தின் மிகப் பெரும் பணி இது.

Friday 10 August 2018

கலைஞர் நினைவேந்தல் பேரணி - கூட்டம்

கலைஞர் நினைவேந்தல் பேரணி-கூட்டம்!
கோவை வேலாண்டிபாளையத்தில் நடைபெற்றது!









கோவை வேலாண்டிபாளையத்தில் 8-8-2018 வியாழக்கிழமை மாலை அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற கலைஞர் நினைவேந்தல் பேரணியும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞரின் மறைவிற்கு அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் இரங்கலுரையாற்றினார்கள்.

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் வீரவணக்க உரையாற்றினார். நிகழ்வில் குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன், திராவிடர் கழக தோழர்கள் செம்மொழி சுரேசு, பிரதீப் திராவிடன், விவேக், த.பெ.தி.க. தோழர்கள் அ,சம்பத், து.ஆறுமுகம், இரா.ஈசுவரன், ரமேசு, ம,கூத்தபிரான் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியை சங்கமம் செயற்பாட்டாளர் தோழர் வில்வம் ஒருங்கிணைத்தார்.


நிழற்படங்கள் உதவி : தோழர் வில்வம்

கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி !

கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி !

திராவிடர் விடுதலைக் கழக தலைவர்

கொளத்தூர் மணி அறிக்கை




50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர், 18 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், 80 ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தின் கடைக்கோடி சமூக பிரிவிலிருந்து அதிகாரத்தின் உச்சிற்கு உயர்ந்த ஒரு மனிதர் கலைஞர் இன்றைக்கு விடைபெற்றுக்கொண்டுவிட்டார்.

95 வயது வாழ்க்கை என்பது ஒரு முழுமையான நிறை வாழ்வுதான். அவர் விட்டுச்சென்ற கொள்கைகளை எப்படி அவர் கட்டி எழுப்பிய இயக்கம் பாதுகாக்க போகிறது என்பதுதான் கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்கக் கூடும்.

திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் கொள்கைகளை ஒழிப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் இன்றைக்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த தடைகளை கடந்து இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல போகிறோம் என்பது தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்னிருக்க கூடிய மிகப்பெரிய சவால். அந்த சவாலை கடந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட இயக்க அரசியலை தீவிரமாக முன்னெடுத்து செல்வது ஒன்று தான் கலைஞருக்கு செலுத்துகிற நிலையான அஞ்சலியாக இருக்கும் என்பது நமது கருத்து

கண்ணீர் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் கண்ணீரை துடைத்துக் கொண்டு காலத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகி கொண்டு இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை சீர்குலைத்து அதை சின்னபின்னமாக்கிவிட்டால் தமிழகத்தில் திராவிட அரசியலை ஒழித்துவிட முடியும் என்ற திட்டமிட்ட சூழ்ச்சி இன்றைக்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழக தலைமை புரிந்துகொண்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

அந்த சூழ்ச்சிகளை முறியடித்து கலைஞர் கட்டியெழுப்பிய சமூகநீதி குறித்த கருத்துகளை, மாநிலங்களுக்கான உரிமை கருத்துகளை, திராவிடர் இயக்கத்தின் தனித்துவமான அடையாளங்களை சமரசம் செய்து கொள்ளாமல் தீவிரமாக முன்னெடுப்பது ஒன்று தான் கலைஞர் உருவாக்கி சென்றிருக்கிற வெற்றிடத்தை நிரப்புவதற்கான சரியான முயற்சியாக இருக்கு முடியும்.

இப்போதே அந்த சூழ்ச்சிகள் அரங்கேறிவிட்டன என்று தான் தோன்றுகிறது. தமிழகத்தின் மூத்த தலைவர் ஒருவருக்கு அண்ணா நினைவிடத்தில் ஒரு பகுதியில் அடக்கம் செய்வதற்கு கூட அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு மூலம் ஒரு அறிவிப்பு வருகிறது என்று சொன்னால் இது ஏதோ தமிழக அரசின் குரல் மட்டும் அல்ல இதற்கு பின்னால் மத்திய பார்ப்பன ஆளம்வர்க்கத்தின் குரலும் இருப்பதாக தான் நாம் கருதுகிறோம். எனவே சூழ்ச்சிக்கான திட்டங்கள் இப்போதே துவங்கி விட்டன. இந்த அறிவிப்பு சற்று கூட நாகரீகமற்றது என்பது நம்முடைய கருத்தாகும், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசுனுடைய அனுமதி எதுவும் இல்லாமல் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அண்ணா நினைவிடத்தில் கலைஞருடைய உடலை அடக்கம் செய்வதில் என்ன தடை இருக்கிறது என்பது நமக்கு புரியவில்லை

தமிழக அரசின் தலைமை செயலாளர் இதுகுறித்து சட்ட பிரச்சனை இருக்கறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். இதில் எந்த சட்ட பிரச்சனையும் கிடையாது, சட்ட தடைகளும் கிடையாது இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு சூழ்ச்சிகரமான முடிவு என்று வழக்கறிஞர்களும் தெளிவாக பதில் சொல்லிவிட்டார்கள்

எனவே தமிழ்நாடு அரசு எங்கிருந்தோ வருகின்ற ஓர் உத்தரவிற்காக அடிபணிந்து தமிழகத்தில் கட்டி எழுப்பிய அரசியல்பண்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு தன்னை உள்ளாக்கி கொள்ள வேண்டாம் என்பதே நமது அன்பான வேண்டுகோள், தமிழ்நாடு அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். *திராவிட முன்னேற்ற கழகம் இப்போது அந்த இயக்கத்தின் முன்னால் எழுந்து நிற்கின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு துணிவோடு கொள்கை போர்வாள்களாக தங்களை வளர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்*. இது தான் கலைஞருக்கு நாம் செலுத்துகிற உண்மையான மரியாதை அர்ப்பணிப்பு என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கலைஞருக்கு தலைதாழ்ந்து வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொளத்தூர் மணி
தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்

கலைஞருக்கு வீர வணக்கம் !

திராவிடர் இயக்கத் தூண் கலைஞருக்கு,

கோவை வெங்கிட்டாபுரம்

குத்தூசி குருசாமி படிப்பகத்தில்

வீர வணக்கம் !


 



மறைந்த திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவவருமான கலைஞருக்கு 07,08,2018 அன்று இரவு கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன், கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களும் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

Thursday 9 August 2018

கலைஞர் விடை பெற்றார்!



விடை பெற்றார் பெரியாரின் சீடர் !

கலைஞர் விடை பெற்றார் !!


கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும்! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி!

கலைஞரே.. உமக்கு குருசாமி படிப்பகத்தின் வீரவணக்கம்!!


Wednesday 6 June 2018

பிராமணாள் கபே பெயர் அழிப்பு போராட்டம்.

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் தோழர் சா.கதிரவன், தோழர் அர.இராசன் விடுதலை!




திருச்சி திருவரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் தலைமையில் கடந்த  20.10.2012 அன்று 'பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடை பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட கழகத்தின் பொதுச் செயலாளர்  கு.இராம கிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்றக் காவலில் அனைவ ரையும் திருச்சி சிறையில் 15 நாட்கள்  அடைக்கப் பட்டிருந்தனர்.

இருந்த போதும் பல்வேறு வழக்குகள், கோரிக்கை களுக்கு செவி சாய்க்காத அரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முற்றுகை போராட்டத்திற்கு அடுத்த நாளே 'பிராமணாள் கபே' பெயர் பலகையை நீக்கியது
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.



கடந்த 6 வருடங்களாக நடை பெற்ற இந்த வழக்கு, 05.06.2018 அன்று நீதிமன்ற விசார ணைக்கு வந்தது.

 இந்த வழக்கை, கழகத்தின் துணைத் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறி ஞருமான செ.துரைசாமி அவர்கள் ஆஜராகி வாதிட்டார்.

துணைத் தலைவரின் வாதத்தை ஏற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 112 தோழர் களையும் இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.

வேலாண்டிபாளையம் பகுதியிலிருந்து குத்தூசி குருசாமி படிப்பக பொறு ப்பாளர்கள் தோழர் சா.கதிரவன், தோழர் அர.இராசன் ஆகியோர்  அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் 15 நாள் திருச்சி சிறையில் இருந்தனர்.

விடுதலையான தோழர்களி்ன் பிரிவு, வாழ்நாளில் மறக்க இயலாத சோகமான நாளாக இருந்தது என்பது குறிப்பிட த்தக்கது.

Friday 18 May 2018

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பற்றி !        

   

(பகுதி -1)

ஜெகதீஸ் சொந்த  ஊர் மைசூர், 
அங்கு தான்  பிறந்து, வளர்ந்தது.
ஆனால் இவர் தாய் மொழி தெலுங்கு, தந்தை  இந்திய ரயில்வேயில் கண் மருத்துவர் பணி, நடுத்தர குடும்பம்,கல்லூரி படிப்பை முடித்த ஜகதீஸ் சுயதொழில் செய்து கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற கனவு,பணம் சம்பாதிக்கும் வெறி பற்றி கொண்டது.

கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில், ஹோல்சேல் நெய், பலசரக்கு , இப்படி பல தொழில்கள்செய்தார் ஜகதீஸ, ஆனால் அவரின் கோடீஸ்வர கனவு ஈடேறுமா..

கேள்வி எழுந்துகொண்டே இருந்தது,மனைவி பெயர் விஜி, 
ஒரு பெண் குழந்தை, மனைவி விஜியை ஜகதீஸ் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டதாக சொல்கிறார்கள், 

திருமணம் ஆன  நாள்முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணம் ஜகதீஸ் வீட்டில் இருப்பது அரிது, இந்த நேரத்தில் தான் யோகா கற்று வந்தார் நண்பர்களுடன், மனைவி கொலை சர்ச்சை, எல்லாம்  சேர்ந்துகொள்ள  ஜகதீஸ்  முன்பு  செய்த  தேங்காய்  வியாபாரம்  சம்பந்தமாக  கோவை  பொள்ளாச்சி பகுதிகளுக்கு  வந்து  போனதால்  அந்த  இடம்  தனக்கு  சாதகம்  என்று  எண்ணி  அங்கு  கடைபரப்ப ஏதுவான  இடம் என்று  கண்டுகொண்டார், மேலும் சொந்த ஊரில் பலருக்கு ஜகதீசை தெரியும் என்பதால் அருகில் உள்ள  கோவைக்கு   1989-ம் ஆண்டு ஓடிவந்தார், சும்மா இல்லை  பெரும் ஜகஜால திட்டத்துடன்,


விகடனை பயன்படுத்தி ஜகதீஸ் ஜக்கி ஆன கதை !
======================
குமுதம் நித்யானந்தாவை வைத்து, “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தொடரைத் தொடங்கினார்கள்.  நித்யானந்தாவின் சுவையான மொழி நடை காரணமாக இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

குமுதம் அதிபர் ஜவஹர்  பழனியப்பனோடு நெருக்கமான நித்யானந்தாவுக்காக குமுதம் தன் கதவுகளைத் திறந்தது.  இந்தத் தொடர் நித்யானந்தாவை,  அண்ணாமலை ரஜினிகாந்த் போன்ற வளர்ச்சியடைய வைத்தது.

நித்யானந்தாவின் தொடர் அடைந்த வளர்ச்சியைக் கண்டதும் விகடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான்,இதே  நேரம்தான்  நம்ம  ஜகதீஸ் கோயம்பத்தூரில், லிங்கம் ஒன்றை நிறுவி வசூல் லோக்கல்  விளபரங்கள்  மூலம்  வசூல்  லோக்கல்  லெவலில் சூடு  பிடித்தது, லோக்களை  தாண்டி  தன் பிசினசை  அகில இந்திய  அளவில்  கடைபரப்ப ஜகதீஸ் தன் பிசினஸை விளம்பரபடுத்தும் நோக்கில் பத்திரிகை வாசல் படிகளில் ஏறி இறங்கிகொண்டிருந்தார், 

விகடன் வாய்ப்பு கொடுத்தது, அப்போதுதான் ஜெகதீஷாக இருந்து வித்தியாசமாக சத்குருவை போட்டு ஜக்கி வாசுதேவ்,வாசுதேவ் அப்பன் பெயர், 

ஆக ஒருவழியாக  சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று மருவி ...விகடன் ஜக்கியை வைத்து  அழகாக போட்டோ சூட் செய்து குமுதத்துக்கு போட்டியாக ஒரு ஆன்மீக தொடரை தொடங்குகிறது விகடன்.  

நித்யானந்தாவைப் போலவோ, ஓஷோ போலவோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவோ, விரிவான அறிவும், வாக்கு சாதுர்யமும், மொழி நடையும் இல்லாதவர் ஜக்கி.   இதனால் மற்றவர்களைப் போல, ஜக்கி இத்தொடரை எழுதாமல், ஜக்கியின் பொன்மொழிகளாக பட்டி டிங்கரிங் செய்து அதை தொகுத்து தொடராக வெளியிடப்பட்டது.  

இத்தொடரை தொகுத்தது, சுபா என்ற இரட்டை எழுத்தாளர்கள்.   இந்தத் தொடருக்காக, ஜக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை, விகடன் நிறுவனத்தின் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு தந்ததாகத் தெரிகிறது.மற்ற ஆன்மீக வியாபாரிகளோடு ஒப்பிடுகையில் தன்னிடம் உள்ள குறையான வசீகரமான பேச்சு இல்லாதததை வேறு வகையில் சரி செய்தான் ஜக்கி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன உலகின் மூத்த தத்துவ ஞானிக்கு நேர் முரணாக “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை முன்வைத்தான்.   

வழக்கமான ஆன்மீக குருக்கள் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக் கொண்டு அருள் வாக்கு கொடுப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும் வலம் வந்து கொண்டு, தத்துவமும் அருள்வாக்கும் அளிக்கும் சாமியாரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. 

இந்தத் தொடர் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதவ் என்கிற நபரை சத்குருவாக மாற்றியது. 

ஆனந்த விகடன் தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு கூடுகிறது.  

ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும், ஜக்கிவாசுதேவின் ஆன்மிக வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின.   இவ்வாறு வளர்ந்த அந்த வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகமெங்கும் நடத்தப்படும் ஈஷா யோகா தியான வகுப்புகள்.

===========================
ஈஷா யோகா என்ன நடக்கிறது..?==========================

8000 ரூபாய் பீஸ்  மூன்று நாள் என்றுதான் தொடங்குவார்கள்,முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள்.   

அந்த பூஜையின் போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள்.  

இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.  வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது.

இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, 

இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.  வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். 

அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள்.  தரும்போதே, இந்த சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள்.  

நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள். எல்லாம் பிசினஸ் ட்ரிக்தான் ..

வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள்.  மூன்று சில நேரம் நான்கு  நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது….. 
அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்….  மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள். 

ஆனால் பேசுறவன் பூரா கிறிஸ்துவ மதமாற்ற பேர்வழிகள் போல கூட்டத்தில் சில செட்டப் செல்லாப்பாக்கள் தான் அதை படம்பிடித்து வீடியோ விற்பனை அனல் பறக்கும்...

கடசியா அடுத்த  பிட்டு போடுவானுகள்..
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.  அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள்.  

ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். 

இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்….  

யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே… 

முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள்.  

வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப்பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..


தன்னை  மறக்கும்  ஊக்கமருந்துகள்  அவர்களுக்கு தயாராக  இருக்கும், வாலண்டியராக சேர்ந்த  நபர்கள்  பெத்த  அப்பன்  ஆத்தாளை  கூட  ஓடி போயடுங்கன்னு  சொல்லிட்டு  சத்குரு  அடுத்து  விமானம்  வாங்க  தேனீக்கள்  போல  பயனற்ற  உழைப்பை  உழைப்பார்கள், அவர்களை  பெத்து  வளர்த்த  பெற்றோர்களுக்கோ  இல்லை  அவர்களுக்கோ  அவர்கள்  வாழ்க்கை  இருக்காது, 

அடிமைக்கு  கூட  தான்  அடிமை  என்று தெரிந்து  உழைப்பான்  ஆனால்  அது கூட  உண்ரமுடியாதா மேல் நிலைக்கு  அவர்கள்  சென்று இருப்பார்கள், வசியம்  என்ற  கலை  இந்தியாவில்  முன்பு  இருந்தது  நாபகம்  வருகிறது ஜட்டி குருவின்  கார்பரேட்  பிராடு தனத்தை  பார்த்து ...

ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும்.

உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ?  ஒரு கோடியை தாண்டும்,.  

சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ?  14 கோடி. இதுக்கு மெயிண்டனன்ஸ் வருசத்துக்கு 15 லட்சம் ...

தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்து விட்டது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது.  

Whatsapலிருந்து நகலெடுக்கப்பட்டது.

Tuesday 1 May 2018

தொழிலாளர்களின் தோழன் அண்ணல் அம்பேத்கர்.

இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் நாட்டின்

மே தினத்தின் உண்மை சமத்துவ நாயகன் 

தொழிலாளர்களின் தோழன் அண்ணல் அம்பேத்கர்!



இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில் முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.
ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார்.

அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார். அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.
அவை:-

1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்
2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்
3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.
4. சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு அனுகூலச் சட்டம்
5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி
6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்
7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்
8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு
9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்
10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்
11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்
12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்
13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்
14. தொழிலாளர் சேமநல நிதி
15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்
16. மகப்பேறு நலச் சட்டம்
17. கிராக்கிப்படி
18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்
19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு
20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்
21. வருங்கால வைப்புநிதி சட்டம்
22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்
23. இந்திய தொழிற்சாலை சட்டம்
24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,
25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,
26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா
27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்
28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா

மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்..
அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம்!

நன்றி: Baskaran Chandiran

தந்தை பெரியாரின் மே நாள் உரை.

பொதுஉடைமைவாதி பெரியார். 


தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேசவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.
ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.
இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களேதான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி, தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.
ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.
ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவையாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
                                                                                        
 (காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்  தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
                                                                                                                                      குடிஅரசு-சொற்பொழிவு - 12.05.1935

பெரியார் பேசுகிறார் வலைத்தளத்திலிருந்து.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...