Friday 18 May 2018

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பற்றி !        

   

(பகுதி -1)

ஜெகதீஸ் சொந்த  ஊர் மைசூர், 
அங்கு தான்  பிறந்து, வளர்ந்தது.
ஆனால் இவர் தாய் மொழி தெலுங்கு, தந்தை  இந்திய ரயில்வேயில் கண் மருத்துவர் பணி, நடுத்தர குடும்பம்,கல்லூரி படிப்பை முடித்த ஜகதீஸ் சுயதொழில் செய்து கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற கனவு,பணம் சம்பாதிக்கும் வெறி பற்றி கொண்டது.

கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில், ஹோல்சேல் நெய், பலசரக்கு , இப்படி பல தொழில்கள்செய்தார் ஜகதீஸ, ஆனால் அவரின் கோடீஸ்வர கனவு ஈடேறுமா..

கேள்வி எழுந்துகொண்டே இருந்தது,மனைவி பெயர் விஜி, 
ஒரு பெண் குழந்தை, மனைவி விஜியை ஜகதீஸ் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டதாக சொல்கிறார்கள், 

திருமணம் ஆன  நாள்முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணம் ஜகதீஸ் வீட்டில் இருப்பது அரிது, இந்த நேரத்தில் தான் யோகா கற்று வந்தார் நண்பர்களுடன், மனைவி கொலை சர்ச்சை, எல்லாம்  சேர்ந்துகொள்ள  ஜகதீஸ்  முன்பு  செய்த  தேங்காய்  வியாபாரம்  சம்பந்தமாக  கோவை  பொள்ளாச்சி பகுதிகளுக்கு  வந்து  போனதால்  அந்த  இடம்  தனக்கு  சாதகம்  என்று  எண்ணி  அங்கு  கடைபரப்ப ஏதுவான  இடம் என்று  கண்டுகொண்டார், மேலும் சொந்த ஊரில் பலருக்கு ஜகதீசை தெரியும் என்பதால் அருகில் உள்ள  கோவைக்கு   1989-ம் ஆண்டு ஓடிவந்தார், சும்மா இல்லை  பெரும் ஜகஜால திட்டத்துடன்,


விகடனை பயன்படுத்தி ஜகதீஸ் ஜக்கி ஆன கதை !
======================
குமுதம் நித்யானந்தாவை வைத்து, “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தொடரைத் தொடங்கினார்கள்.  நித்யானந்தாவின் சுவையான மொழி நடை காரணமாக இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

குமுதம் அதிபர் ஜவஹர்  பழனியப்பனோடு நெருக்கமான நித்யானந்தாவுக்காக குமுதம் தன் கதவுகளைத் திறந்தது.  இந்தத் தொடர் நித்யானந்தாவை,  அண்ணாமலை ரஜினிகாந்த் போன்ற வளர்ச்சியடைய வைத்தது.

நித்யானந்தாவின் தொடர் அடைந்த வளர்ச்சியைக் கண்டதும் விகடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான்,இதே  நேரம்தான்  நம்ம  ஜகதீஸ் கோயம்பத்தூரில், லிங்கம் ஒன்றை நிறுவி வசூல் லோக்கல்  விளபரங்கள்  மூலம்  வசூல்  லோக்கல்  லெவலில் சூடு  பிடித்தது, லோக்களை  தாண்டி  தன் பிசினசை  அகில இந்திய  அளவில்  கடைபரப்ப ஜகதீஸ் தன் பிசினஸை விளம்பரபடுத்தும் நோக்கில் பத்திரிகை வாசல் படிகளில் ஏறி இறங்கிகொண்டிருந்தார், 

விகடன் வாய்ப்பு கொடுத்தது, அப்போதுதான் ஜெகதீஷாக இருந்து வித்தியாசமாக சத்குருவை போட்டு ஜக்கி வாசுதேவ்,வாசுதேவ் அப்பன் பெயர், 

ஆக ஒருவழியாக  சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று மருவி ...விகடன் ஜக்கியை வைத்து  அழகாக போட்டோ சூட் செய்து குமுதத்துக்கு போட்டியாக ஒரு ஆன்மீக தொடரை தொடங்குகிறது விகடன்.  

நித்யானந்தாவைப் போலவோ, ஓஷோ போலவோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவோ, விரிவான அறிவும், வாக்கு சாதுர்யமும், மொழி நடையும் இல்லாதவர் ஜக்கி.   இதனால் மற்றவர்களைப் போல, ஜக்கி இத்தொடரை எழுதாமல், ஜக்கியின் பொன்மொழிகளாக பட்டி டிங்கரிங் செய்து அதை தொகுத்து தொடராக வெளியிடப்பட்டது.  

இத்தொடரை தொகுத்தது, சுபா என்ற இரட்டை எழுத்தாளர்கள்.   இந்தத் தொடருக்காக, ஜக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை, விகடன் நிறுவனத்தின் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு தந்ததாகத் தெரிகிறது.மற்ற ஆன்மீக வியாபாரிகளோடு ஒப்பிடுகையில் தன்னிடம் உள்ள குறையான வசீகரமான பேச்சு இல்லாதததை வேறு வகையில் சரி செய்தான் ஜக்கி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன உலகின் மூத்த தத்துவ ஞானிக்கு நேர் முரணாக “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை முன்வைத்தான்.   

வழக்கமான ஆன்மீக குருக்கள் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக் கொண்டு அருள் வாக்கு கொடுப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும் வலம் வந்து கொண்டு, தத்துவமும் அருள்வாக்கும் அளிக்கும் சாமியாரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. 

இந்தத் தொடர் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதவ் என்கிற நபரை சத்குருவாக மாற்றியது. 

ஆனந்த விகடன் தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு கூடுகிறது.  

ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும், ஜக்கிவாசுதேவின் ஆன்மிக வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின.   இவ்வாறு வளர்ந்த அந்த வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகமெங்கும் நடத்தப்படும் ஈஷா யோகா தியான வகுப்புகள்.

===========================
ஈஷா யோகா என்ன நடக்கிறது..?==========================

8000 ரூபாய் பீஸ்  மூன்று நாள் என்றுதான் தொடங்குவார்கள்,முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள்.   

அந்த பூஜையின் போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள்.  

இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.  வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது.

இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, 

இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.  வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். 

அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள்.  தரும்போதே, இந்த சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள்.  

நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள். எல்லாம் பிசினஸ் ட்ரிக்தான் ..

வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள்.  மூன்று சில நேரம் நான்கு  நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது….. 
அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்….  மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள். 

ஆனால் பேசுறவன் பூரா கிறிஸ்துவ மதமாற்ற பேர்வழிகள் போல கூட்டத்தில் சில செட்டப் செல்லாப்பாக்கள் தான் அதை படம்பிடித்து வீடியோ விற்பனை அனல் பறக்கும்...

கடசியா அடுத்த  பிட்டு போடுவானுகள்..
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.  அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள்.  

ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். 

இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்….  

யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே… 

முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள்.  

வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப்பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..


தன்னை  மறக்கும்  ஊக்கமருந்துகள்  அவர்களுக்கு தயாராக  இருக்கும், வாலண்டியராக சேர்ந்த  நபர்கள்  பெத்த  அப்பன்  ஆத்தாளை  கூட  ஓடி போயடுங்கன்னு  சொல்லிட்டு  சத்குரு  அடுத்து  விமானம்  வாங்க  தேனீக்கள்  போல  பயனற்ற  உழைப்பை  உழைப்பார்கள், அவர்களை  பெத்து  வளர்த்த  பெற்றோர்களுக்கோ  இல்லை  அவர்களுக்கோ  அவர்கள்  வாழ்க்கை  இருக்காது, 

அடிமைக்கு  கூட  தான்  அடிமை  என்று தெரிந்து  உழைப்பான்  ஆனால்  அது கூட  உண்ரமுடியாதா மேல் நிலைக்கு  அவர்கள்  சென்று இருப்பார்கள், வசியம்  என்ற  கலை  இந்தியாவில்  முன்பு  இருந்தது  நாபகம்  வருகிறது ஜட்டி குருவின்  கார்பரேட்  பிராடு தனத்தை  பார்த்து ...

ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும்.

உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ?  ஒரு கோடியை தாண்டும்,.  

சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ?  14 கோடி. இதுக்கு மெயிண்டனன்ஸ் வருசத்துக்கு 15 லட்சம் ...

தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்து விட்டது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது.  

Whatsapலிருந்து நகலெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...