Thursday 27 August 2015

'' கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்'' நூல்களை கொடையளித்த தோழர் புஜங்கன்..!

'' கவிஞர் வெள்ளியங்காட்டான்
படைப்புகள்''
நூல்களை கொடையளித்த தோழர் புஜங்கன்..!

*************************************************************



கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம்
வெள்ளியங்காட்டைச் சேர்ந்தவர்
மறைந்த பகுத்த்றிவுப் பாவலர் வெள்ளியங்காட்டான்..

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைப் போலவே
கொடிய வறுமையிலும் சமூகத்தை நேசித்தவர்.

சமஸ்கிருதப் புலமையும் பெற்றவராய் விளங்கிய
அவர், வேதம், பகவத் கீதை போன்றவற்றை
பெரியாரைப்போலவே ஆய்வு செய்து, அவற்றால்
காலங்காலமாய் மக்கள் மீது திணிக்கப்பட்ட
வைதீக பார்ப்பனக் கருத்துக்களை விலக்கி
பகுத்தறிவுப் பார்வையில் பாக்களை வடித்துள்ளார்.

1991ஆம் ஆண்டில் தனது 87ஆவது வயதில்
இயற்கை எய்திவிட்டார்.

தற்போது கோவையில் வசிக்கும் அவரது மகள்
வெ.இரா.நளினி அவர்கள் காவ்யா பதிப்பகம் மூலம்
தனது தந்தையாரின் படைப்புகளை
வெளிவரச் செய்துள்ளார்.

கடந்த 16.08.2015 அன்று
கோவை, சின்னியம்பாளையத்தில் நடந்த
கொங்கு மண்டல நீர்வழிப்பாதை மீட்பு மற்றும்
விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டின் போது
''1613 பக்கங்கள் கொண்ட
ரூ.1325 விலையுள்ள மதிப்புமிக்க
கவிஞர் வெள்ளியங்காட்டான்
படைப்புகள்  2
தொகுதிகளை
கொடுத்து மகிழ்வை ஏற்படுத்தினார்
மேட்டுப்பாளையம் கோட்ட
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
கமிட்டி உறுப்பினர் தோழர் புஜங்கன் அவர்கள்...!  ''

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாள சா.கதிரவன்,
நூல்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.
நூல்கள் தேவைக்கு
அறிவுச்சோலை, கோவை
98433 23153, 80156 42028

தோழர் மறைந்தார் !

தோழர் ம.சாக்ரட்டீஸ் மறைந்தார்.!

***************************************

கோவை பெரியார் படிப்பகத்தில்
சில ஆண்டுகள் தொடர்பிலிருந்தார்.
படிப்பகத்திற்கு வரும் ஒருசில தோழர்களுக்கு
அறிமுகமானவர்.
கடந்த பத்தாண்டுகளக்கு முன்பு
திடீரென வருவதை
நிறுத்திக்கொண்டார்..
தோழர் சாஜித்தோடு
மட்டும் தொடர்பிலிருந்தார்.
கடும் வறுமையிலிருந்த
அவருக்குதோழர் சாஜித்
பேருதவி செய்துவந்தார்..
பின்னர் சொந்த ஊரான
ஈரோட்டிற்கே குடிபெயர்ந்தவர்
கடந்த ஆண்டு 26.07.2014 அன்று இரவு
மாரடைப்பால் இறந்துவிட்டார்.
கடந்த 25 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில்
நடந்த ஈழம் கருத்தரங்கத்திற்கு
வந்த சாக்ரட்டீசின் சகோதரர் (சித்தப்பா மகன்)
கா.பரிமளம் இத்தகவலை என்னிடம் தெரிவித்தார்..
சாக்ரட்டீசின் மனைவி தோழர் சாஜித்திடம் தகவலை
தெரியப்படுத்தக் கோரியுள்ளார்.
தோழர் சாக்ரட்டீசின் மனைவிக்கும்
இரு மகள்களுக்கும் எமது வருத்தங்களை
தெரிவிக்கிறோம்.
தொடர்புக்கு
தோழர் கா.பரிமளம், ஈரோடு
95248 99085

Tuesday 18 August 2015

நூல் அறிமுக விழா.




தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...