Friday, 25 December 2015

தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி

கோவை வெங்கிட்டாபுரத்தில்

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின்

42ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் தோழர்கள் சூளுரை..!










அறிவுலக ஆசான் தந்தை‍‍ பெரியாரின் 42ஆவது நினைவு நாளையொட்டி 24.12.2015 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டா புரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டார்கள்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முன்னாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் மே.அ.தனபாலன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி, குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் தந்தை பெரியாரின் பணிகளைப் பற்றியும், இன்றைய சூழலில் சாதி,மத வெறிகளுக்கெதிராக தோழர்களின் பங்களிப்பைப் பற்றியும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் தலைமை வகித்துப் பேசினார். தோழர் சி.வா.ஞானவேல் நன்றி கூறினார்.

பெரியார் பிஞ்சுகள் முகில், மகிழ்நிலா, நிழற்படப் போராளி ஜெயபால் ராமய்யா, ஓவியர் முரளி, தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், ப.பாலன், இரா.ஈசுவரன், மு.பெரியதம்பி, வால்பாறை சிவா, ப.ராஜ்குமார் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...